பௌத்த பீடங்களின் ஆலோசனைக்கேற்ப புதிய வேலைத்திட்டம்- ரணில்

233 0

பௌத்த பீடங்கள் மூன்றின் சங்க சபையினால் முன்வைக்கப்பட்ட 15 அம்ச திட்டத்திற்கு ஏற்ப, புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மல்வத்து பீட போதகர் நியங்கொட விஜிதசிறி தேரரை சந்தித்து விட்டு, ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறினார்.

குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக தேவையில்லையென மூன்று பீடங்களும் இணைந்து எடுத்துள்ள தீர்மானத்தை தான் பாராட்டுவதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.