அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் குண்டை வெடிக்கச் செய்து கொண்டு உயிரிழந்த பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரனுடைய புதைக்கப்பட்ட சடலம் நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று (07) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிபதி அசங்கா ஹெட்டிவத்தவின் முன்னிலையில் இந்த தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி குண்டை வெடிக்கச் செய்து கொண்டு இவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புக்கள் ஏற்கனவே அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும், அதில் சிலது பழுதடைந்து காணப்படுவதனால், தேவையான சில உறுப்புக்களைப் பெறுவதற்கே இன்று மீண்டும் தோண்டப்படுவதாகவும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக சகோதர ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

