கொழும்புத் துறைமுக பகுதிகளில் எண்ணெய்ப் படலம்

308 0

கொழும்புத் துறைமுக நகரை அண்மித்த கரையோரத்தில் எண்ணெய்ப் படலம் காணப்படுவதாக, சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகாரச் சபை தெரிவித்துள்ளது.

கல்கிஸ்ஸ மற்றும் வெள்ளவத்தை கரையோரங்களில் அண்மையில் ஏற்பட்ட எண்ணெய்ப் படலத்தின் ஒரு பகுதியே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக, சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர், கலாநிதி டேர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்ஸ மற்றும் வெள்ளவத்தை கரையோரங்களில் காணப்படும் எண்ணெய்ப் படலத்தை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சிறியளவில் மாத்திரமே எண்ணெய்ப் படலம் காணப்படுவதாகவும் அதனால் சூழலுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கப்பலொன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே இவ்வாறு எண்ணெய்ப் படலம் ஏற்பட்டுள்ளதென்றும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட கப்பல் குறித்து ஆராயப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.