அர்ஜுன மகேந்திரன் – கோப் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது

721 0

cope-report-sri-lankaஇலங்கை மத்­திய வங்­கியின் பிணை முறி விவ­காரம் தொடர்பில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ள ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் குறித்தான கணக்­காய்வு திணைக்­க­ளத்தின் அறிக்கை இன்று கோப் குழு­விடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்ள­து. அத்­துடன் குறித்த விசா­ரணை மீதான அடுத்த கட்ட நகர்­வுகள் குறித்து இன்­றைய தினமே தீர்­மா­னிக்­கப்படும்.

ஒரு­வேளை இந்த விசா­ர­ணையின் இறுதி முடிவு இன்­றைய தினம் எடுக்க கூடும் என கோப் குழுவின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுனில் ஹந்­துன்­நெத்தி தெரி­வித்தார் .இலங்கை மத்­திய வங்கி பிணை முறி விவ­காரம் தொடர்பில் வின­விய போதே கேச­ரிக்கு அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார் .

இலங்கை மத்­திய வங்­கியின் பிணை முறியை ஆளுநர் அர்­ஜூன மகேந்­திரன் தன்­னு­டைய உற­வி­ன­ருக்கு வழங்­கி­யமை தொடர்பில் பெரும் குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­துள்­ளன . இதன்­படி ஆளுநர் அர்­ஜூன மகேந்­தி­ரனை உட­ன­டி­யாக பதவி வில­கு­மாறு எதி­ர­ணி­யினர் போராட்­டங்­களை நடத்­திய வலி­யு­றுத்தி வரு­கின்­ற னர். இதன்­படி இது தொடர்பில் கணக்­காய்வு திணைக்­க­ளத்­தினால் தீவிர விசாரணை மேற்­கொள்­ளப்­பட்டது. குறித்த விசா­ர­ணை­களின் பிர­காரம் மத்­திய வங்­கியில் மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ள­னவா என்­பது தொடர்­பி­லான அறிக்கை முழு­மை­யாக பூர்த்­தி­யாகி உள்­ளது .

இதே­வேளை பாரா­ளு­மன்ற த்தின் கோப் குழு­விலும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப்டு­வ­ரு­கின்றன. கோப் குழுவின் விசா­ரணை யின் போது மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜூன மகேந்­தி­ரனும் பாரா­ளு­மன்­றத்­திற்கு அழைக்­கப்­பட்டு வாக்­கு­மூலம் அளித்­தி­ருந்தார். இதன்­போது கோப் குழு அர்­ஜூன மகேந்­தி­ர­னிடம் தீவிர விசா­ரணை மேற்­கொண்டது. இதன் வாக்­கு­மூலம் கணக்­காய்வு திணைக்­க­ளத்­தி­டமும் அனுப்பி வைக்­கப்­பட்டுள்­ளது.

எவ்­வா­றா­யினும் கணக்­காய்வு திணைக்­க­ளத்தின் அறிக்கை ஆதிக்கம் செலுத்த கூடி­ய­தாக அமையும் கணக்­காய்­வாளர் நாயகம் காமினி அபே­சிங்க கலந்து கலந்­து­கொண்டு கணக்­காய்வு திணைக்­க­ளத்தின் அறிக்­கையை கைய­ளிக்­க­வுள்ளார்.இது தொடர்பில் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்­துன்­நெத்தி குறிப்­பி­டு­கையில்,

மத்­திய வங்கி பிணை முறி மோச­டியில் மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜூன மகேந்­திரன் தொடர்­பு­பட்­டுள்­ளரா? என்­பது குறித்த உண்மை தன்மை கணக்­காய்வு திணைக்­க­ளத்தின் அறிக்­கை மூல­மாக வெ ளிவரும். எனினும் இதன் அடுத்த கட்ட நகர்வை எப்­படி முன்­னெ­டுப்­பது என்பது குறித்து கோப் குழுவின் இன்றைய அமர்வின் போது தீர்மானிக்கப்படும்.அத்துடன் மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் இறுதி முடிவினை இன்றைய தினம் எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார்.

Leave a comment