சாஹ்ரானுடன் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்பு,பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

259 0

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மீது சஹ்ரானுடன்  நெருக்கிய  தொடர்புகளை வைத்துள்ளார் எனக் கூறி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்று செய்யப் பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டினை ஈரோஸ் இயக்கத்தின்  தலைவர் ஆர் .பிரபாகரன் இன்று காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளார்

குறித்த முறைப்பாட்டில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தற்கொலை  குண்டுதாரி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் எனவும்,

அது குறித்த  படங்கள் சமூக வலைத்தளங்களில் உலாவுவதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி ஹிஸ்புல்லாவுக்கும் சஹ்ரானுக்கும் இடையில் உள்ள தொடர்பினை கண்டு பிடிக்குமாறும்  தான் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்