ஹெரோயினுடன் இருவர் கைது

377 0

கற்பிட்டி, மண்டலக்குடா பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேல் கடற்படை கட்டளையின் கடற்படையினர் கற்பிட்டி, மண்டலகுடா பகுதியில் மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, 35 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 3 கையடக்க தொலைபேசிகளும், அவர்கள் பயணிப்பதற்கு பயன்படுத்திய வேன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மண்டலக்குடா பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 39 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள ஹெரோயின் போதைப் பொருள், தொலைபேசி, வேன் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.