அதுரலிய ரத்ன தேரரை சந்தித்தார் பேராயர்

374 0

கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதுரலிய ரத்ன தேரரை மல்கம் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று நேரில் சந்தித்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் ரிசாத்  பதியுதீன் , கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலக்குமாறு கோரி அத்துரலிய ரத்ன தேரர் கடந்த 31 ஆம் திகதியில் இருந்து இன்றுடன் 4வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.