முல்லைத்தீவு கரைதுறைப்பற்றில் நிறைவு செய்யப்பட வேண்டிய பல தேவைகள் நிலுவையில்

311 0

mullaithivuமுல்லைத்தீவு கரைதுரைப்பற்;று பிரதேச செயலர் பிரிவின் இவ்வாண்டில் பல்வேறு தேவைகள் நிறைவு செய்யப்பட்ட வேண்டியுள்ளதாக பிரதேச செயலகத்தின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள 46 கிராம அலுவலர் பிரிவுகளில் சுமார் நாற்பத்தி இரண்டாயிரத்து 55 பேர் வரையில் மீள்குடியேறியுள்ளனர்.

இந்நிலையில் நான்யிரத்து 47 குடும்பங்களுக்கான புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டியதுடன் 1061 சேதமடைந்த வீடுகளை புனரமைக்க வேண்டியுள்ளது.

ஆத்துடன் ஆயிரத்து 174 குடும்பங்களுக்கான மலசல கூட வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளதுடன் 170 கிணறுகள் அமைக்கப்படவேண்டிய தேவையுள்ளது.

ஆத்துடன் 561.45 கிலோ மீற்றர் நீளமான வீதிகளைப்புனரமைக்கவேண்டியுள்ளதுடன் 2853 குடும்பங்களுக்கான வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஒன்பது ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்கவேண்டியுள்ளதுடன் 212 தற்காலிக வீடுகளையும் அமைத்துக் கொடுக்கவேண்டிய தேவையுள்ளதாகவும் பிரதேச செயலகத்தின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.