ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது

284 0
கிரேண்பாஸ் பொலிஸ் பிரிவில் சேதவத்தை பிரதேசத்தில் 12 கிராமும் 50 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேதவத்தை, வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் ​சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண் இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

கொழும்பு குற்றப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.