கிரேண்பாஸ் பொலிஸ் பிரிவில் சேதவத்தை பிரதேசத்தில் 12 கிராமும் 50 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேதவத்தை, வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பெண் இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
கொழும்பு குற்றப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.