புதிய பாதையின் அவசியம்!

399 0

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட  குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்­ன­ணி­யிலும் கொழும்பு துறை­முக நகர நிர்­மா­ணத்தின் பின்­ன­ணி­யிலும் நாட்டின் மீது அக்­க­றையும் கரி­ச­னையும் கொண்­டுள்ள சர்­வ­தேச நாடு­களின் கவ­னத்தைத் தமிழ் அர­சியல் தரப்­பினர் தமக்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி காய் நகர்த்­தல்­களை மேற்­கொள்ள வேண்டும்.

இதன் ஊடாக தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் தீர்த்துக் கொள்­வ­தற்­கான புதிய வழி­மு­றை­யொன்றில் பயணம் செய்­வ­தற்கு முயற்­சிக்க வேண்டும். இத்­த­கைய முயற்­சிக்­கான சூழலும் நாட்டின் நிலை­மை­களும் எவ்­வா­றி­ருக்­கின்­றன என்று நோக்­கு­வது முக்­கியம்.

கொழும்­பிலும் மட்­டக்­க­ளப்­பிலும் தொடர்ச்­சி­யாகத் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை நடத்தி, 250க்கும் மேற்­பட்ட அப்­பா­வி­களின் உயிர்­களைக் குடித்த இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வா­தத்தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான தேசிய பாது­காப்புச் செயற்­பா­டு­களும் கண்­கா­ணிப்பு முறை­களும் உச்சக் கட்­டத்தில் முதன்மை பெற்­றி­ருக்­கின்­றன.

நாடெங்­கிலும் தேடுதல் நட­வ­டிக்­கை­களிலும் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தும் பணி­க­ளிலும் மேற்கொள்ள பொலி­ஸாரும் அதி­ர­டிப்­ப­டை­யி­னரும், இரா­ணு­வத்­தி­னரும் முழு­வீச்சில் இறக்­கி­வி­டப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

முஸ்லிம் மக்கள் விசேட கண்­கா­ணிப்­புக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். வதந்­திகள், மிரட்­டல்கள், மிரட்டல் கடி­தங்கள் என்­ப­னவும் தீவி­ர­மாகக் கவ­னத்­துக்கு எடுக்­கப்­பட்டு சம்­பந்­தப்­பட்ட இடங்­களும் பிர­தே­சங்­களும் உச்­ச­க்கட்ட பாது­காப்­புக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

ஊயிர்த்த ஞாயிறு தின தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் தொடர்பில் உண்­மை­யான நிலை­மையை அறிந்து கொள்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவின் ஆரம்ப நிகழ்­வி­லேயே, நாட்டின் அமை­திக்குப் பங்கம் விளை­விக்கும் வகை­யி­லான சம்­ப­வங்கள், அரச உயர் மட்­டத்­தி­னரின் பொறுப்­பற்ற செயற்­பா­டுகள் என்­பன குறித்த தக­வல்கள் வெளி­யாகி மக்­களை அதிர்ச்­சி­ய­டையச் செய்­தி­ருக்­கின்­றன.

அதே­வேளை, இறுக்­க­மான பாது­காப்புச் செயற்­பா­டுகள், பாது­காப்பு கண்­கா­ணிப்­பு­க­ளுக்­குள்­ளேயும் வன்­மு­றை­களைக் கட்­ட­விழ்த்து, இனங்­க­ளுக்­கி­டையில் மோதல்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான சதி முயற்­சி­களில் சிலர் ஈடு­படத் தயா­ராக இருப்­பது பற்­றிய தக­வல்­களும் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

இதனால் நாட்டின் இயல்பு நிலை பாதிப்­ப­டை­யவும், இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­றவு நல்­லி­ணக்கம் என்­பன மேலும் சீர்­கு­லை­வ­தற்­கு­மான சந்­தர்ப்­பங்­களே உரு­வாகி வரு­கின்­றன. இந்த நிலைமை மோச­மா­னது. கவ­லைக்­கு­ரி­யது. கவ­லைக்­கு­ரி­யது மட்­டு­மல்ல. பலரும் இது விட­யத்தில் கவனம் செலுத்தி மிகவும் பொறுப்­போடு செய­லாற்ற வேண்டும் என்­ப­தையும் இந்த நிலை­மைகள் வலி­யு­றுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றன.

இனங்­க­ளுக்­கி­டையில் ஏற்­ப­டு­கின்ற சந்­தே­கமும் அச்ச உணர்வும் பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கே வழி­வ­குக்கும். இன­வாதம் மற்றும் மத­வா­தத்தின் அடிப்­ப­டையில் ஏற்­ப­டு­கின்ற முரண்­பா­டான மன நிலை­மைகள் காலம் கால­மாக நிலைத்து நின்று தீராத பகை­மைக்கும் வலி­மை­யான வன்­மத்­திற்கும் வன்­மு­றை­க­ளுக்கும் ஆழ­மான அடித்­த­ளத்தை ஏற்­ப­டுத்­தி­வி­டத்­தக்க வல்­லமை வாய்ந்­தவை என்­பதைப் புரிந்து கொள்­ளுதல் அவ­சியம்.

இந்த உணர்­வுகள் மிகவும் மென்­மை­யா­னவை. அதே­வேளை வலி­மை­யா­னவை. சிறிய சம்­பவம் ஒன்றே, மோச­மான பாதிப்­பு­க­ளையும், மோச­மான விளை­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­வி­டு­வ­தற்குப் போது­மா­ன­தாக அமைந்­து­விடும்.

இத்­த­கை­யதோர் உணர்­வு­பூர்­வ­மான நிலை­யில்தான் பேரி­ன­வா­தமும், சிங்­கள பௌத்த தேசியம், மேலா­திக்கத் திமிர்­கொண்டு இந்த நாட்டின் சிறு­பான்மை தேசிய இன மக்­க­ளா­கிய தமிழ் பேசும் மக்கள் மீது ஒடுக்­கு­மு­றை­க­ளையும் அடக்­கு­மு­றை­க­ளையும் தொடர்ந்து மேற்­கொள்­கின்ற ஒரு போக்கைக் கடைப்­பி­டித்துச் செயற்­பட்டு வரு­கின்­றது.

இதற்கு மறுத்­து­ரைக்க முடி­யாத அழுத்­த­மான சான்­றாக உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து முஸ்லிம் மக்கள் மீது மத ரீதி­யா­கவும், இன­ரீ­தி­யா­கவும் தாக்­கு­தல்­களை நடத்தி அவர்­களின் இருப்­புக்கும் சொத்­துக்­க­ளுக்கும் பொரு­ளா­தா­ரத்­துக்கும் பாரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்ற போக்கைப் பேரி­ன­வா­திகள் கடைப்­பி­டித்­தி­ருக்­கின்­றார்கள்.

அதே­வேளை, தேசிய பாது­காப்பை முன்­னிட்டு, தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள, வீதிச் சோத­னைகள், சுற்றி வளைப்­புக்கள், தேடுதல் நட­வ­டிக்­கைகள் என்­ப­வற்­றுக்கு மத்­தியில் பௌத்த பிக்­குகள், தமது அடி­யார்கள் சகி­தமும், பொலிஸார் மற்றும் இரா­ணு­வத்­தி­னரின் துணை­யு­டனும் இந்து மதத் தலங்­களைப் பகி­ரங்­க­மாக ஆக்­கி­ர­மிக்­கின்ற நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றார்கள்.

முல்­லைத்­தீவு மற்றும் திரு­கோ­ண­மலை ஆகிய மாவட்­டங்­களில் இடம்­பெற்­றுள்ள இந்த நட­வ­டிக்­கைகள் பௌத்­தர்கள் மீதும், ஆட­்சி­யா­ளர்கள் மீதும் தமிழ் மக்கள் நம்­பிக்கை இழந்து வெறுப்­ப­டையச் செய்­தி­ருக்­கின்­றன.

அரா­ஜ­கமும் ஆக்­கி­ர­மிப்பும்

முல்­லைத்­தீவு பழைய செம்­மலை நீரா­வி­யடி பிள்­ளையார் கோவில் வளா­கத்தின் ஒரு பகு­தியை ஆக்­கி­ர­மித்­துள்ள பௌத்த பிக்கு ஒருவர், குரு­கந்த ரஜ­ம­கா­வி­காரை என்ற பெயரில் ஒரு பௌத்த விகா­ரையை அமைத்­துள்­ள­துடன், பெரி­ய­தொரு புத்தர் சிலை­யையும் நிர­்மா­ணித்­துள்ளார்.

இந்தப் பகு­தியில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரும் பொலிஸாரும், இந்த பௌத்த பிக்­கு­வுக்குப் பாது­காப்பு வழங்கி, அவ­ரு­டைய அத்­து­மீ­றிய செயற்­பா­டு­க­ளுக்குத் துணை­பு­ரிந்து வரு­கின்­றார்கள். இந்த ஆல­யத்தில் வழி­ப­டு­வ­தற்­காகச் சென்ற ஊர் மக்­களை அந்த பௌத்த பிக்கு மத ரீதி­யாக நிந்­தனை செய்­த­துடன், தமது பூர்­வீக ஆல­யத்தில் வழி­ப­டு­வ­தற்குத் தடை­யேற்­ப­டுத்தி, அவர்­களை அச்­சு­றுத்­திய சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

அந்த பௌத்த பிக்­குவை எதிர்த்து வாதிட்டு, தமது வழி­பாட்டு உரி­மையை நிலை­நாட்ட முயன்ற ஊர் மக்­களை பொலி­ஸாரும், இரா­ணு­வத்­தி­னரும் அச்­சு­றுத்தி அங்­கி­ருந்து வெளி­யேற்­றி­யுள்­ளனர். இந்த பிணக்கு சம்­பந்­த­மாக நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு, நீராவிப் பிள்­ளையார் கோவிலில் மக்கள் வழி­ப­டு­வ­தற்கு இடை­யூறு செய்யக் கூடாது என்று முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­பதி உத்­த­ர­விட்­டி­ருந்த போதிலும், அத­னையும் உதா­சீனம் செய்து அந்த மக்­களை, அங்கு நிலை­கொண்­டுள்ள பௌத்த பிக்­குவும் பொலி­ஸாரும் கடந்­த­வாரம் மீண்டும் அச்­சு­றுத்தி வெளி­யேற்­றி­யி­ருக்­கின்­றார்கள்.

அங்கு நாட்­டப்­பட்­டி­ருந்த நீரா­வி­யடிப் பிள்­ளையார் ஆலயம் என்ற பெயர்ப்­ப­ல­கையை அகற்றி, அந்த பௌத்த பிக்­கு­வினால் புதி­தாக நாட்­டப்­பட்­டி­ருந்த கண­தேவி தேவா­லய என்ற சிங்­களப் பெயர்ப்­ப­ல­கையை அகற்றி தமிழ்ப் பெயர்ப்­ப­ல­கையை மீண்டும் நாட்­டு­மாறு விடுத்த உத்­த­ர­வுக்­க­மைய அங்கு சென்ற ஊர் மக்கள் மீண்டும் அச்­சு­றுத்­தப்­பட்டு, பொலி­ஸா­ரினால் அங்­கி­ருந்து விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர்.

இந்த ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கைக்குத் தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரி­களும் துணை­போ­யுள்­ள­துடன், மத ரீதி­யான வர­லாற்று உரித்து கொண்ட தமிழ் மக்­களின் உரி­மை­களை அவர்கள் ஏற்க மறுத்து அத்­து­மீறி இந்து ஆலய வளா­கத்தை ஆக்­கி­ர­மித்­துள்ள பௌத்த பிக்­கு­வுக்கு ஆத­ர­வாகச் செயற்­பட்டு வரு­கின்­றனர் என்று குற்றம் சுமத்தி முறை­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

கன்னியா விவகாரம்

இதே­போன்று தொன்­மை­யான வர­லாற்று பின்­ன­ணியைக் கொண்ட திரு­கோ­ண­மலை கன்­னியா வெந்­நீ­ரூற்றுப் பகு­தியில் உள்ள புரா­தன விநா­யகர் ஆல­யத்தை ஆக்­கி­ர­மித்து பௌத்த விகாரை அமைப்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆங்­கி­லேயர் காலத்தில் ஒரு தமிழ்க்­கு­டும்­பத்­திற்கு வழங்­கப்­பட்ட இந்தக் காணி வாழை­யடி வாழை­யாக அந்தக் குடும்­பத்­தி­னரால் பரா­ம­ரிக்­கப்­பட்டு வந்­துள்­ளது. அந்தக் குடும்­பத்தின் வழித்­தோன்­ற­லா­கிய திரு­மதி க.கோகி­ல­ர­மணி என்ற பெண்­ம­ணிக்கு உரித்­தான அந்தக் காணியைக் கைப்­பற்­று­வ­தற்கும், அவ­ரு­டைய அறங்­கா­வலர் பொறுப்பில் உள்ள விநா­யகர் ஆல­யத்தை இடித்­த­ழித்து ஆக்­கி­ர­மிப்­ப­தற்கும் அந்தப் பகு­தியில் ஏற்­க­னவே அடாத்­தாக வந்து குடி­யே­றி­யுள்ள வில்கம் விகா­ர­ாதி­பதி வேறு சில பௌத்த பிக்­கு­க­ளுடன் முயன்று வரு­கின்றார்.

கோகி­ல­ர­ம­ணி­யிடம் இருந்து விலைக்குப் பெறு­வ­தற்கு மேற்­கொண்ட முயற்­சிகள் தோல்­வி­ய­டைந்ததைத் தொடர்ந்து தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் ஊடாக  இந்தக் காணியை ஆக்­கி­ர­மிப்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. இதன்­போது நேர­டி­யாக பௌத்த பிக்­குகள் மற்றும், தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரி­க­ளுக்கும் கோகி­ல­ர­ம­ணிக்கும் இடையில் நேர­டி­யான வாக்­கு­வா­தங்­களும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

விநா­யகர் ஆல­யமும் அதனைச் சூழ்ந்த இடமும் தொல்­பொருள் திணைக்­க­ளத்­திற்குச் சொந்­த­மான இடம் என்று, அரச வர்த்­த­மானி மூலம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக இந்த வாக்­கு­வா­தத்­தின்­போது அந்தத் திணைக்­க­ளத்தைச் சேர்ந்த அதி­காரி கோகி­ல­ர­ம­ணி­யிடம் தெரி­வித்­துள்ளார்.

ஆயினும் அர­சாங்க சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமை­வாக ஆட்சி உரிமை அதி­கா­ரத்தைப் பெற்­றுள்ள தனக்கு எந்­த­வித அறி­வித்­தலும் கொடுக்­காமல் எவ்­வாறு தொல்­பொருள் திணைக்­களம் அந்தக் காணிக்கு உரி­மை­கோரி அரச வர்த்­த­மா­னியில் பிர­க­னடம் செய்ய முடியும் என்ற கேள்­விக்கு அவ்­வாறு எவ­ருக்கும் அறி­விக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று அந்த அதி­காரி பதி­ல­ளித்­துள்­ளதன் மூலம், தமிழ் மக்கள் மீதான தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் அரா­ஜக போக்கும் அடக்­கு­முறைச் செயற்­பாடும் எத்­த­கை­யது என்­பது தெளி­வா­கி­யி­ருக்­கின்­றது.

தொடரும் இரா­ணுவச் சூழலும் அடக்­கு­முறைச் செயற்­பா­டு­களும்

தமிழ் மக்கள் மீதான இன, மத ரீதி­யான ஆக்­கி­ர­மிப்­புக்­களும், அடக்­கு­மு­றை­களும் காலம் கால­மாகத் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. யுத்த காலத்தில் ஆயுதந் தரித்த விடு­த­லைப்­பு­லிகள்; இரா­ணுவ ரீதியாகப் பலம் பெற்­றி­ருந்­த­போது இந்த ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கைகள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

யுத்­தத்தில் அர­சாங்கம் வெற்­றி­பெற்று விடு­த­லைப்­பு­லிகள் இரா­ணுவ ரீதி­யாக மௌனிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து கேட்பார் எவ­ரு­மற்ற நிலையில் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை­களும், அவர்­களின் தாயகப் பிர­தே­சத்தை ஆக்­கி­ர­மிக்கும் நட­வ­டிக்­கை­களும் பல்­வேறு வடி­வங்­களில் ஆட்­சி­யா­ளர்­க­ளினால் பல்­வேறு அரச நிர்­வாகப் பொறி­மு­றை­களின் ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இதனால் தமிழ் மக்­களின் வடக்கு கிழக்குத் தாயகப் பிர­தேசம் நாளுக்கு நாள் பேரி­ன­வா­தி­க­ளினால் கப­ளீ­கரம் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. நாளுக்கு நாள் என்­ப­தை­விட மணித்­தி­யா­லத்­தக்கு மணித்­தி­யாலம் இந்த ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கைகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன என்று கூறு­வதே பொருத்­த­மாக இருக்கும்.

யுத்தம் முடி­வ­டைந்து பத்து வரு­டங்கள் நிறை­வ­டைந்து விட்­டன. ஆயினும் யுத்த மோதல்­க­ளுக்­காக வடக்­கிலும் கிழக்­கிலும் நிலை­கொண்­டி­ருந்த படை­யினர் அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­ப­ட­வில்லை. மாறாக யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள போதிலும், தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் நில­வு­கின்­றது. மௌனிக்­கப்­பட்ட விடு­த­லைப்­பு­லிகள் மீண்டும் உயிர்­பெற்று வந்­து­வி­டு­வார்கள் என்ற போலி­யான அச்­சத்தைக் கற்­பிதம் செய்து மாறி மாறி ஆட்­சிக்கு வந்­துள்ள அர­சுகள் வடக்­கிலும் கிழக்­கிலும் இருந்து படை­யி­னரை அகற்­று­வ­தற்குப் பதி­லாக அவர்­களை மக்கள் குடி­யி­ருப்பு கேந்­திர முக்­கி­யத்­து­வ­மு­டைய இடங்­களில் நிரந்­த­ர­மாக நிலை­நி­றுத்­தி­யி­ருக்­கின்­றன.

அவ்­வாறு நிலை­நி­றுத்­தப்­பட்­டுள்ள படை­யி­ன­ருக்கு சொகு­சான நவீன வச­திகள் அனைத்தும் செய்து கொடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அத்­துடன் யுத்த நிலை­மைகள் இல்­லாத போதிலும், வரவு செலவுத் திட்­டத்தில் பாது­காப்பு அமைச்­சுக்கு வரு­டந்­தோறும்  அதி­க­ளவு நிதி­யொ­துக்­கப்­பட்டு அரச படை­க­ளுக்கு முதன்மை இட­ம­ளிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

வடக்­கிலும் கிழக்­கிலும் தொடர்ச்­சி­யான இரா­ணு­வ­ம­ய­மான ஒரு சூழலைப் பேண வேண்டும் என்­பதில் ஆட்­சி­யா­ளர்கள் கண்ணும் கருத்­து­மாகச் செயற்­பட்டு வரு­கின்­றார்கள். இந்த இரா­ணுவச் சூழலும், இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பும், யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் சிங்­கள பௌத்த தேசிய நிலைப்­பாட்டைத் தமிழர் பிர­தே­சங்­களில் வேரூன்றச் செய்­வ­தற்கும் அந்த மக்கள் எழுச்சி பெற முடி­யாத வகையில் அடக்கி வைத்­தி­ருப்­ப­தற்கும் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்குப் பேரு­த­வி­யாக இருக்­கின்­றன.

இரா­ணுவச் சூழல் கார­ண­மா­கவும், இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பு கார­ண­மா­கவும் யுத்­த­கா­லத்தில் சொந்த இடங்­களில் இருந்து பாது­காப்­புக்­காக இடம்­பெ­யர்ந்­தி­ருந்த தமிழ் மக்­க­ளுக்குப் பூர்­வீ­க­மா­கவும், அரச அதி­கார நடை­மு­றை­க­ளுக்கு அமை­வாக உரித்­து­டைய வழி­யிலும் சொந்­த­மான காணி­களில் மீள குடி­யேற முடி­யாத நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

இரா­ணு­வத்­தி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட காணி­களை விடு­விக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்­வேறு வழி­களில் அர­சுக்கு முன்­வைக்­கப்­பட்­டுள்ள போதிலும், அந்தக் காணி­களை விடு­விப்­பதில் அக்­கறை காட்­டாத நிலை­மையும் காலத்தை இழுத்­த­டித்து அந்த காணி உரி­மையை மழுங்­க­டிக்­கின்ற போக்­குமே ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் காணப்­ப­டு­கின்­றது.

பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள் விடு­விக்­கப்­பட்டு இடம்­பெ­யர்ந்­துள்ள மக்கள் அங்கு மீளக் குடி­ய­மர்த்­தப்­ப­டு­வார்கள் என்று அரச உயர் தலை­வ­ரா­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல தட­வைகள் அளித்­தி­ருந்த உறு­தி­மொ­ழிகள் காற்றில் பறக்­க­வி­டப்­பட்ட நிலை­மையே தொடர்­கின்­றது.

மறு­பக்­கத்தில் பௌத்த பிக்­கு­களும், தொல்­பொருள் திணைக்­க­ளமும், வன­ஜீ­வ­ராசி திணைக்­க­ளமும், வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளமும் பல்­வேறு கார­ணங்­க­ளையும் சட்­ட­திட்­டங்­க­ளையும் சுட்­டிக்­காட்டி, தமிழ் மக்­களின் காணி­களை அப­க­ரிப்­பதில் தீவி­ர­மாகச் செயற்­பட்டு வரு­கின்­றார்கள்.

தேர்­தலே இலக்கு; வாக்கு வங்­கியை பலப்­ப­டுத்­து­வதே நோக்கம்

தமிழ் மக்கள் மீது தொடர்­கின்ற பல்­வேறு வடி­வங்­க­ளி­லான அடக்­கு­முறை குறித்தும், இரா­ணு­வத்தின் பிடியில் உள்ள காணி­களை விடு­விப்­பது தொடர்­பிலும் அத்­து­மீ­றிய சிங்­களக் குடி­யேற்றம், பௌத்த மத ஆக்­கி­ர­மிப்பு உள்­ளிட்ட பல்­வேறு பிரச்­சி­னைகள் குறித்து, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பல்­வேறு மட்­டங்­களில் அரச தரப்­பி­ன­ரு­டனும் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் அமைச்­சர்கள் மட்­டு­மல்­லாமல், இரா­ணுவ தரப்­பி­ன­ரு­டனும் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தி­யுள்­ளது.

இருப்­பினும் அந்தப் பேச்­சுக்­க­ளின்­போது வாக்­கு­று­தி­களும் காலக்­கெ­டுக்­களும் வழங்­கப்­பட்டபோதிலும், எது­வுமே நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அரச தரப்­பி­னரின் நட­வ­டிக்­கைகள் வெறும் கண்­து­டைப்பு நட­வ­டிக்­கை­க­ளா­கவும் ஏமாற்ற நட­வ­டிக்­கை­க­ளா­க­வுமே அமைந்­தி­ருந்­தன. அமைந்­தி­ருக்­கின்­றன.

இத்­த­கைய ஒரு சூழ­லில்தான் பேரின அர­சியல் தலை­வர்­க­ளுக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவு வழங்கி நல்­லாட்சி அமை­வ­தற்கும், நெருக்­க­டி­களில் இருந்து தப்பி, அந்த ஆட்சி தொடர்­வ­தற்கும் உரிய ஆத­ரவை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு வழங்கி வந்­தது. ஆனால் அந்த நிபந்­த­னை­யற்ற ஆத­ர­வுக்கு பிரதி உப­கா­ர­மாக, சாதா­ரண நடை­மு­றை­களின் மூலம் தீர்வு காணக்­கூ­டிய பிரச்­சி­னை­க­ளுக்­கும்­கூட நல்­லாட்­சியின் அரச தலை­வர்கள் தீர்வு காண முன்­வ­ர­வில்லை. இனிக்க இனிக்கப் பேசு­வ­திலும், நம்­பிக்கை ஊட்­டத்­தக்க வகை­யி­லான உறு­தி­மொ­ழி­களை வழங்­கு­கின்ற வாய்ப்­பந்­தலில் திற­மை­யுள்­ள­வர்­க­ளாகத் தங்­களை இது­வ­ரையில் இனம் காட்டி வந்­துள்­ளார்கள்.

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் இடம்­பெற்று நாடு நெருக்­க­டி­யான ஒரு சூழ­லுக்குள் தள்­ளப்­பட்டு, தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­கின்ற அர­சாங்­கத்தின் பொறுப்­பான செயற்­பா­டு­களும், மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்­க­ளுக்கும் போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்கும் ஐ.நா. மனித உரிமைப் பேர­வைக்கு பொறுப்பு கூறு­கின்ற கடப்­பாடும் கிடப்பில் போட­ப்­பட்­டி­ருக்­கின்­றன.

இந்த நிலையில் சர்­வ­தேச இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வா­தத்தின் பிடிக்குள் சிக்கி பல்­வேறு வடி­வங்­களில் முஸ்லிம் சமூகம் நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுத்­துள்­ளதைப் போலவே, தமிழ் மக்­களும் அரச நிர்­வாக இயந்­தி­ரத்­தின் பல்­வேறு பொறி­மு­றை­களின் ஆக்­கி­ர­மிப்புச் செயற்­பா­டு­களில் சிக்கி, அவற்றில் இருந்து வெளி­யே­று­வ­தற்­கான வழி­தெ­ரி­யாமல் தடு­மாறிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

தேசிய பாது­காப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்­டிய கட்­டாய நிலை­மைக்கு ஆளா­கி­யுள்ள அரசு, உயிர்த்த ஞாயிறு தின குண்­டுத்­தாக்­கு­தல்­களைத் தடுத்து நிறுத்தக் கூடி­ய­தாக இருந்த போதிலும் அந்தப் பொறுப்பைக் கோட்­டை­விட்­ட­மைக்­காகப் பல தரப்­பி­ன­ரதும் கண்­டனக் கணை­க­ளுக்கும் விமர்­சன வினாக்­க­ளுக்கும் முகம் கொடுக்க நேர்ந்­துள்­ளது.

அதே­வேளை, நாட்டின் அதி­யுச்ச தலை­வர்­க­ளா­கிய ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தங்­க­ளுக்­கி­டை­யி­லான அதி­காரப் போட்­டியில் தீவி­ர­மாக ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள். அடுத்­த­தாக அண்­மையில் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி மற்றும் பொதுத் தேர்­தல்­களில் எவ்­வாறு வெற்­றி­பெற்று ஆட்­சிக்கு வரலாம் என்­ப­தி­லேயே தீவிர கவனம் செலு­த்­தி­யி­ருக்­கின்­றார்கள். அந்தத் தேர்­தல்­களில் தமது வெற்றி வாய்ப்­புக்­கு­ரிய சாத­க­மான வாக்கு வங்­கியை எவ்­வாறு பலப்­ப­டுத்­தலாம், அதற்­கான அர­சியல் தந்­தி­ரோ­பாயச் செயற்­பா­டு­களை எப்­படி முன்­னெ­டுக்­கலாம் என்­ப­தி­லேயே கரி­சனை கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

அவர்கள் தமது தேர்தல் வெற்­றிக்கு சிங்­கள பௌத்த தேசி­ய­வா­தத்­தையும், அதன் ஊடான பெரும்­பான்மை சிங்­கள மக்­களின் வாக்குப் பலத்­தி­லுமே நம்­பிக்கை வைத்­துள்­ளார்கள். இந்த நிலையில் அவர்கள் சிறு­பான்மை இன மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்தோ அல்­லது அவர்­களின் வாக்கு வங்­கி­களில் நம்­பிக்கை வைப்­பது குறித்தோ கவனம் செலுத்­துகின்ற நிலை­மையைக் காண முடி­ய­வில்லை.

சர்­வ­தேச தலை­யீட்­டுக்­கான கோரிக்கை

இத்­த­கை­யதோர் அர­சியல் நிலை­மை­யில்தான் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் இலங்­கைக்­கான அவுஸ்­தி­ரே­லிய தூதுவர் டேவிட் ஹொலி­யு­ட­னான சந்­திப்­பின்­போது, தமிழ் மக்கள் மீதான அடக்­கு­மு­றை­களைத் தடுப்­ப­தற்கு சர்­வ­தே­சத்தின் தலை­யீடு அவ­சியம் என வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

அவுஸ்­தி­ரே­லிய தூது­வ­ரு­ட­னான சந்­திப்­பின்­போது உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்­களின் உண்­மை­யான பின்­ன­ணியைக் கண்­ட­றிதல் பற்­றியும், அவற்­றுடன் சம்­பந்­தப்­பட்ட அனைத்துக் குற்­ற­வா­ளி­க­ளையும் கண்­டு­பி­டித்து நீதியின் முன் நிறுத்­து­வது குறித்தும் பேச்­சுக்கள் நடத்­தப்­பட்ட அதே­வேளை, முஸ்லிம் மக்­களும், தமிழ் மக்­களும்,  பாது­காப்பு கெடு­பி­டி­க­ளுக்குள் சிக்­கி­யி­ருப்­பது பற்­றியும், தமிழ் மக்கள் மீது தொடர்­கின்ற கெடு­பி­டிகள் குறித்தும் பேச்­சுக்கள் நடை­பெற்­றி­ருக்­கின்­றன.

யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் தீர்வு காணப்­பட்­டி­ருக்க வேண்­டிய பல பிரச்­சி­னைகள், கடந்து போன பத்து வரு­ட­கா­லத்தில் தீர்க்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் அது நடை­பெ­ற­வில்லை. யுத்தம் முடி­வ­டைந்த பத்­தா­வது வரு­டத்தில் உண்­மை­யான பயங்­க­ர­வா­தத்­துக்கும், சர்­வ­தேச பயங்­க­ர­வா­தத்­துக்கும், மற்­று­மொரு சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய முஸ்­லிம்­களின் மத்­தியில் தோன்­றி­யுள்ள அடிப்­படை மத­வாத, பயங்­க­ர­வாத சக்­தியின் சவால்­க­ளுக்கும் நாடு முகம் கொடு­த்­துள்ள நிலையில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு சர்­வ­தே­சமே தீர்வு காண உதவ வேண்டும் என்ற கோரிக்­கையை இரா.சம்­பந்தன் அவுஸ்­தி­ரே­லிய தூது­வ­ரிடம் முன்­வைத்­துள்ளார்.

பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­கின்ற அர­சாங்­கத்தின் கடப்­பாட்டில் ஏற்­பட்­டுள்ள ஸ்தம்பிதம் அரச தரப்­பி­ன­ருடன் நடத்­தப்­ப­டு­கின்ற பேச்­சுக்கள் எதுவும் பய­ன­ளிக்கப் போவ­தில்லை என்ற நிலை­மையை உருவாக்கியுள்ளது.

அதே­வேளை, சர்­வ­தேச பயங்­க­ர­வாதம் இலங்­கையில் காலடி எடுத்து வைத்­துள்­ள­மை­யா­னது, அமெ­ரிக்கா, இந்­தியா, சீனா, ஜப்பான் உள்­ளிட்ட நாடு­களின் பிராந்­திய நலன்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகக் கருதப்படுகின்றது. குறிப்பாக இலங்கையில் கால் பதித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத சக்தியானது, தென்னாசியப் பிராந்தியத்தில் இராணுவ, பொருளதார சமநிலைமையைக் குழப்பியடிப்பதற்கு வழிகோலலாம். இதன் காரணமாகவே 9 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் உண்மையான நிலைமைகள், உண்மையான பின்னணி என்பவற்றைக் கண்டறிவதற்காக அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் புலனாய்வுத் துறையினர் இலங்கையில் பிரசன்னமாகி புலன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தென்னாசிய பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் மிக்க நிலையமாகத் திகழும் இலங்கை மீது சீனா, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் நீண்ட காலமாகவே கண் வைத்திருந்தன. முப்பது வருடகால யுத்தச் சுமையைச் சுமந்த இலங்கை யுத்தத்தின் பின்னர் மீள் எழுச்சி பெறுவதற்கான உதவிகளை வழங்குவதை, இந்த வல்லரசு நாடுகள் இலங்கையில் கால் பதிப்பதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதையும் காண முடிகின்றது.

இந்த நிலையில் இங்கு தலையெடுத்துள்ள சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தலும்கூட, அந்த நாடுகளின் இலங்கை பிரவேசத்திற்கான வழித்தடத்தை மேலும் விரிவுபடுத்தியிருக்கிறது என்றே கூற வேண்டும். இந்த நிலையில் தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பு கூறுதல் என்ற தளத்தில் இருந்து வேறுபட்ட ஒரு சர்வதேச தளத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவே தோன்றுகின்றது.

அந்த வகையில் இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய தூதுவருடனான சந்திப்பில் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகளைத் தடுத்துநிறுத்தி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சர்வதேசத்தின் உதவி அவசியம் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனின் கோரிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது.

அவுஸ்திரேலியாவுடனான இந்தச் சந்திப்புடன் சர்வதேச உதவிக்கான கோரிக்கை (வழமையான வெளிநாட்டுத் தூதுவர்கள்  மற்றும் இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்களைப்  போன்று நின்றுவிடாமல்) இலங்கையின் கொழும்பு துறைமுக நகரத்தின் பொருளாதார வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள முன்வந்துள்ள சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் இலங்கையில் கவனம் செலுத்தியுள்ள சர்வதேச நாடுகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அவற்றின் கவனத்தை ஈர்த்து அந்த நாடுகளை நேச சக்திகளாக்கிக் கொள்வதற்கான செயற்பாடுகளில் தமிழ்த் தலைவர்கள் ஈடுபட முன்வர வேண்டும்.

பி.மாணிக்­க­வா­சகம்