வேலணைப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய வெள்ள நிவாரணப் பொருட்களை கையாடப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வேலணைப் பிரதேச செயலகத்திற்கு எதிராக யாழ்.மாவட்டச் செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணையில் குறித்த பகுதிகளில் கிராம சேவையாளர்கள் முதலில் வரவளைக்கப்பட்டு கடும் விசாரணைகளக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்களின் விபரங்கள் அந்தந்தப் பகுதி கிராம சேவையாளர்களினால் சேகரிக்கப்பட்ட பிரதேச செயலகங்களிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளும் மாவட்ட அனர்த முகாமைத்துவ பிரிவினால் வழங்கிவைக்கப்பட்டுவருகின்றது.
இதன்படி கடந்த வருடங்களில் வேலணைப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதற்காக கையளிக்கப்பட்ட வெள்ள நிவாரணத்தில் பெரும் மோசடி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வெள்ள நிவாரணங்கள் வழங்கப்படாமல் உயர் அதிகாரிகளின் மேர்பார்வையின் கீழ் அவை கையாடப்பட்டுள்ளது.
அதாவது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்கள் ஒரு முறை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பதிவேடுகளில் அவர்களுக்க தொடர்ச்சியாக பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டும் செய்யப்பட்டது.
இதன்படி வேலணைப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்கள் கையாடப்பட்டமை தொடர்பாக யாழ்.மாவட்டச் அரசாங்க அதிபர் தலமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்விசாரணைகளின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளாக வேலணைப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளின் கிரம சேவையாளர்கள் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு அழைக்கப்பட்ட கிராம சேவையாளர்கள் ஒவ்வொருவரையும் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில்நந்தனினால் தனித்தனியாக தமது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டடது.
கிராம சேவையாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்றும் யாழ்.மாவட்ட செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் தலையங்கம்
-
சர்வதேச மகளிர் தினம்
March 7, 2023 -
காற்றில் கலந்தது கானக்குயில்!
February 6, 2023 -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தது யார்?
January 31, 2023
தமிழர் வரலாறு
-
மாவீரர் கேணல் கிட்டு
January 16, 2023 -
‘தலைவரின் அக்கினிக்குழந்தை லெப் கேணல் அகிலா.!’
October 30, 2022 -
தியாகி லெப் கேணல் திலீபனின் தியாகப்பயணம் -பன்னிரண்டாம் நாள் 26-09-1987
September 26, 2022
கட்டுரைகள்
-
மாமனாரும் மருமகனும் சர்வகட்சி மாநாடுகளும்
March 20, 2023
எம்மவர் நிகழ்வுகள்
-
அன்னை பூபதி,நாட்டுப்பற்றாளர் தினம் – யேர்மனி 2023
March 20, 2023 -
தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் 33 ஆவது அகவை நிறைவு விழா.
March 19, 2023 -
யேர்மனியின் தலைநகரில் தலைமுறை தாண்டி பேரன், பேத்தி கண்ட தமிழாலயம்!
February 22, 2023 -
அனைத்துலகப் பெண்கள் தினம்,2023 -யேர்மனி.
February 20, 2023 -
தமிழ்ப் பெண்கள் அமைப்பு- யேர்மனி நடாத்தும் வாகைமயில் 2023.
February 20, 2023 -
தேசிய மாவீரர் நாள் – 2021 சிறப்பு வெளியீடுகள்
November 22, 2021