கணவனின் தாக்குதலில் மனைவி பலி

368 0

பெல்மடுல்ல பொலிஸ் பிரிவில் நாரங்கொட பிரதேசத்தில் கணவனின் தாக்குதலுக்கு உள்ளான மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 07.30 மணியளவில் தடியொன்றால் மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பெல்மடுல்ல பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

நாரங்கொட, பெல்மடுல்ல பிரதேசத்தைச் ​சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கடும்ப தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெல்மடுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.