அமித் வீரசிங்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

206 0

வடமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் குறித்து கைதுசெய்யப்பட்ட மஹசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவை எதிர்வரும் ஜூன் 4 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் சலனி பெரேரா இன்று உத்தரவிட்டார்.

பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 5 ஆம் அத்தியாயம்,  அவசரகால சட்டத்தின்  33 (ஈ) பிரிவின் கீழ்  அமித் வீரசிங்க குற்றமிழைத்துள்ளார் என விசாரணைகளில் வெளிபப்டுத்தப்பட்டுள்ளதாக, சிறப்பு பொலிஸ் குழுவின் விசாரணை அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர்  அஜித் குமார  நேற்று நீதிமன்றுக்கு அறிவித்த நிலையில், அது தொடர்பிலான சாட்சி சுருக்கத்தினை மன்றில் சமர்ப்பிப்பதற்காக குறித்த வழக்கு  இன்று மீள விசாரணைக்கு வந்தது.

இதன்போது, நேற்று பொலிசாரால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை உறுதி செய்ய தேவையான சாட்சியங்களின் சுருக்கம் மன்றுக்கு அளிக்கப்பட்டது.