புதிய அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சரும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.
புதிய அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று (29.5.2019) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தனர்.
ரஞ்சித் மத்தும பண்டார – பொதுநிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
பீ.ஹரிசன் – விவசாய, கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதேவேளை, வசந்த சேனாநாயக்க – வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

