யாழ்ப்பாணத்தில் 8 சட்ட விரோத சிகரட் பக்கட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு கடற்படை கட்டளை பிரிவினரும் , பொலிஸ் அதிரடிப்படையினரும் இணைந்து யாழ்ப்பாணம் உதயபுரம் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் யாழ்பாணம் பகுதியை சேர்ந்த 34வயதுடைய வயதுடையவர் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.