அடிப்படைவாதிகளின் செயற்பாட்டால் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்களே -கரு

295 0

சில அடிப்டைவாத முஸ்லிகளால்  மேற்கொள்ளபப்டும் செயற்பாடுகளினால் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்களே எனத் தெரிவித்த சபாநாயகர், நாட்டின் சட்டத்தை அனைவரும் பின்பற்றி செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.அத்துடன் தற்போது நாட்டில் இயங்கி வருகின்ற அடிப்படைவாத கல்வி செயற்பாடுகள், சிறுவர் உரிமைகளை மீறுவதான இளவயது திருமண முறை போன்ற விடயங்கள் குறித்து பாராளுமன்றம் விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும்  சபாநயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள திரைசேரி திணைக்களத்தின் கேட்ப்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற டீ. பீ. ஜயதிலக நினைவு தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.