இரு முச்சக்கர வண்டிகள் நேருக்குநேர் மோதி விபத்து : 3 பேர் பலி, 3 பேர் காயம்!

357 0

வெல்லவாய குடாஓயா பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்று பேர் காயங்களுடன் வைத்தியாசைலயில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டமையால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஒரு முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் எதிலிவெவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 

மற்றைய முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் வெல்லவாய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  தனமல்வில பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.