மின்சார நெருக்கடியை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை!

322 0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால இடைக்கால மற்றம் நீண்டகால நடைமுறைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இது தொடர்பில் சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சரின் வழிகாட்டல் மற்றும் பெருந்தெருக்கல் மற்றும் வீதி அபிவிருத்தி, கனிய வள அபிவிருத்தி மற்றும் துறைமுகம் மற்றும் கடல் நடவடிக்கைகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி ஆகிய அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.