கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

259 0

தெவுந்தர – வெல்லமடம பகுதியில் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தெவுந்தர – வெல்லமட பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்தள்ளது.

பிடபெத்தர மற்றும் அக்குரெஸ்ஸ பிரதேசங்களைச் சேர்ந்த 26 , 34 ஆகிய வயதுகளையுடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 760 கிராம் கேரளா கஞ்சாப் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடற்படையினர் சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மாத்தறை பொலிஸாரிடம் ஒப்படைத்தள்ளனர்.