ஜானக பெரேரா கொலை வழக்கு! 2ஆம் பிரதிவாதிக்கு ஆயுள் தண்டனை!

278 0

மேஜர் ஜெனரால் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேரை தற்கொலை குண்டுத்தாக்குதலில் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான உமர் ஹப்தாப் என்ற நபருக்கு ஆயுள் தண்டனை அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் மற்றும் கம்பஹா சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரேமா சுவர்ணாதிபதி ஆகியோரால் விதிக்கப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்டிருந்த 48 குற்றப்பத்திரிக்கையில் 31 இல் சந்தேகநபர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதல் மூன்று குற்றச்சாட்டுக்கு பிரதிவாதிக்கு 20 வருடங்கள் வீதம் 60 வருடங்கள் சிறைத்தண்டனை நீதியரசர் விதித்தார்.

அத்துடன் குறித்த தண்டனை காலத்தை வேறு வேறாக கழிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

நான்காவது குற்றச்சாட்டு முதல் 31வது குற்றச்சாட்டு வரை பிரதிவாதியை குற்றவாளியாக அறிவித்த நீதியரசர் பிரதிவாதிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அதேபோல் , பிரதிவாதிக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அரசுடமையாக்கவும் உத்தரவிடப்பட்டது.