மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

292 0

தும்மலசூரிய பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தும்மலசூரிய  பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட உடுபத்தாவ – நாத்தான்டிய வீதியில் நாத்தான்டி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளின் வேகட்டுப்பாட்டை இழந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

இதன்போது பலத்தக்காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாரதி துணக்கதேனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் குளியாப்பிடிய பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.