லொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி

265 0

தும்மலசூரிய – குளியாப்பிட்டிய வீதியின் பளுகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அலவ்வ பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.