சீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்

332 0

கடந்த இரண்டு தினங்களில் 16 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் சீகிரியாவை பார்வையிட்டுள்ளனர். நேற்று மாத்திரம் 12 ஆயிரம் பேர் சீகிரியாவை பார்வையிட்டுள்ளனர்.

கடும் நெரிசல் காரணமாக அவர்களில் 5 ஆயிரம் பேர் பார்வையிட முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு உள்ளுர் மக்களுக்கு சீகிரியாவை இலவசமாக பார்வையிட வாய்ப்பளிக்கப்பட்டது.

அவ்வாறு இலவசமாக சீகிரியாவை பார்வையிட வழங்கப்பட்டுள்ள காலம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது என்று சீகிரிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் மேஜர் அனுர நிஸாந்த தெரிவித்துள்ளார்.