ரிஷாத், அசாத் சாலிக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – சுசில்

372 0

நீதித்­து­றைக்கு அவ­ம­திப்­பினை ஏற்­ப­டுத்தும் வித­மாக கருத்­து­ரைத்த மேல்­மா­காண சபை ஆளுநர் அசாத் சாலி மற்றும்   அமைச்சர்  ரிஷாத் பதி­யூதீன் உள்­ளிட்­ட­வர்கள் தொடர்பில் நீதித்­து­றை­சார்ந்த  அமைச்சர் ஏன் இது­வ­ரையில் எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை என்று  எதி­ர­ணியின்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுசில் பிரே­ம­ஜ­யந்த  கேள்­வி­யெ­ழுப்­பினார்.

இன்று சட்­ட­வாட்சிக் கோட்­பாடு  நடை­மு­றையில்  செயற்­ப­டு­கின்­றதா என்ற  சந்­தேகம் காணப்­ப­டு­கின்­றது.  அர­சாங்­கத்தின்   இய­லா­மை­யினை   மறைப்­ப­தற்கு     சட்­டத்தின் மீது    பழி  சுமத்­தப்­ப­டு­கின்­றது    என்றும் அவர் குறிப்­பிட்டார்.

எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில்  நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே   அவர் மேற்­கண்­ட­வாறு  குறிப்­பிட்டார்.

அவர்  மேலும் குறிப்­பி­டு­கையில்,

பயங்­க­ர­வாத அமைப்­புக்­க­ளுடன் நீதி­ப­தி­க­ளுக்கும் தொடர்­புண்டு என  மேல் மாகாண  ஆளுநர் அசாத் சாலி பகி­ரங்­க­மாக தெரி­வித்­துள்ள கருத்து நீதித்­து­றை­யினை அவ­ம­திப்­ப­தா­கவே  காணப்­ப­டு­கின்­றது. நீதி­ப­தி­க­ளுக்கு அவப்­பெ­ய­ரினை ஏற்­ப­டுத்தும் வித­மாக கருத்­து­ரைத்­துள்­ளமை     சட்­டத்­தின் பிர­காரம்  தண்­ட­னைக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்டும்.  ஆனால்  இவ­ரது  கருத்­துக்கு எதி­ராக   நீதி­ய­மைச்சர் தலதா அத்துக்­கோ­ரல  வெறும் மறுப்பு  மாத்­தி­ரமே தெரி­வித்தார். மாறாக  அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­மைக்கு அமைய  எவ்வித சட்ட நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை.

அவ­ச­ர­கால   சட்டம் நடை­மு­றையில் இருக்கும் போதும் கூட அர­சி­யல்­வா­தி­களின்  தலை­யீடு அனைத்து செயற்­பா­டு­க­ளிலும் காணப்­பட்­டுள்­ளன.  தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளாக  சந்­தே­கத்தின் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை விடு­தலை செய்­யு­மாறு    இரா­ணுவ தள­ப­திக்கு  அமைச்சர்  ரிஷாத் பதி­யுதீன்   கோரிக்கை விடுத்­த­தாக குறிப்­பிட்­ட­மையின்  பின்­னணி என்ன? நெருக்­கடி காலத்தில் கூட பொறுப்பு வாய்ந்­த­வர்­களின் கட­மை­க­ளுக்கு     விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­ய­மையும்  தண்­ட­னைக்­கு­ரிய  செயற்­பா­டாகும்.  இவ்­வி­டயம் தொடர்­பிலும்   நீதி­ய­மைச்சர்   எவ்­வித  நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை.

வெல்­லம்­பிட்டி  செப்பு தொழிற்­சா­லையில் இருந்து  கைது செய்­யப்­பட்­ட­வர்கள் விடு­தலை செய்­யப்­பட்­ட­மையின்  பின்­ன­ணியில் நிச்­சயம் அர­சியல் தலை­யீடு  காணப்­ப­டு­கின்­றது. அவ­ச­ர­கால சட்டம்  நடை­மு­றையில் இருக்கும்போது   பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் இவர்கள் கைது செய்­யப்­ப­டாமல்   சாதா­ரண சட்­டத்தின் கீழ்  கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தின் ஊடாக   விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள்.  இவ்­வி­ட­யத்தில் நீதி­மன்­றத்­திற்கும் தவ­றான    விட­யங்­களே   முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவ்­வி­டயம் தொடர்பில் ஏன்  நீதி­ய­மைச்சர்  சட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை. இன்று    சாதா­ரண   மக்­க­ளுக்கு மாத்­தி­ரமே சட்டம் முறை­யாக செயற்­ப­டு­கின்­றதா என்ற  சந்­தேகம்  எழு­கின்­றது.  பெய­ர­ள விலே   சட்­ட­வாட்சிக் கோட்­பாடு   செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

அர­சாங்கம் ஒரு தரப்­பி­ன­ருக்கு எதி­ராக  ஆரம்­பத்தில் இருந்து கொண்டு வர முனை­கின்ற ஒவ்­வொரு விட­யங்­களும் அர­சாங்­கத்­திற்கே  எதிர் விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.  புதிய  பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தை   தேவை­யற்­றது என்று   ஐக்­கிய தேசிய கட்­சியின் பிரதி  தலைவர்  சஜித் பிரே­ம­தாஸ  தற்­போது குறிப்­பி­டு­வது   பய­னற்­றது.

தீவி­ர­வா­தத்தை இல் ­லா­தொ­ழிக்க   புதிய  பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தை  உரு­வாக்க  வேண்டியதில்லை.  2015.09. 29 ஆம் திகதி    நல்­லாட்சி அர­சாங்கம்   ஐக்­கிய   நாடுகள் மனித  உரிமை பேர­வைக்கு  வழங்­கிய    வாக்­கு­று­தி­களை  நிறை­வேற்­றவே   செயற்­ப­டு­கின்­றது.   புதிய  பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம்   தேவை­யற்­றது என்று  மக்கள் மத்­தியில் குறிப்­பி­டு­வதால் எவ்­வித  பயனும் ஏற்­ப­டாது. எந்த இடத்தில் எதிர்ப்­பினை தெரி­விக்க வேண்­டுமோ அவ்­வி­டத்தில் எதிர்ப்­பினை   வெளிப்­ப­டுத்த வேண்டும்  என்­பதை   அமைச்சர்  சஜித் பிரே­ம­தாஸ இனி­யா­வது புரிந்து  கொள்ள வேண்டும்.

புதிய  பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தின்   பாரிய விளை­வுகள் தொடர்பில்  உரிய  தெளி­வில்­லா­ம­லேயே   சபை முதல்வர்  ல­க் ஷமன் கிரி­யெல்­லவும், ஐக்­கிய தேசிய  கட்­சியின்   பின்­வ­ரிசை  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் போலி­யான   கருத்­துக் களை குறிப்­பி­டு­கின்­றார்கள்.     புதிய  பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தில் உள்­ள­டக்­கி­யுள்ள  ஏற்­பா­டு­க­ளினால் ஏற்­ப­ட­வுள்ள விளை­வு­க­ளையும்,  நடை­மு­றையில்  உள்ள  பயங்­க­ர­வாத  தடைச்­சட்­டத்தின்   சிறப்­பி­யல்­பு­க­ளையும்    ஆளும்  தரப்­பி­ன­ருக்கு   எடுத்­து­ரைக்க  தயார் .  அர­சாங்­கத்தின்  இய­லா­மை­யினை மூடி மறைக்க  சட்­டத்தின்  மீது  குற்றஞ்சாட்டுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.