‘ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை’ அர­சியல் பழி­வாங்­க­லுக்­காக கொண்­டு­வ­ரப்­பட்­டது அல்ல-மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே

302 0

வணிகம் மற்றும்கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யா­னது  அர­சியல் பழி­வாங்­க­லுக்­காக கொண்­டு­வ­ரப்­பட்­டது அல்ல. அது தேசிய பாது­காப்­பிற்­கா­கவே கொண்­டு­வ­ரப்­பட்­டது.

எனவே ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி , தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மற்றும் ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பி­னர்­க­ளதும் வாக்­கு­க­ளுடன் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் அந்த பிரே­ரணை நிறை­வேற்­றப்­படும் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்தார்.

ரிஷாத்­துக்கு எதி­ராக சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லா தீர்­மானம் அர­சியல் பழி­வாங்­க­லுக்­காக கொண்டு வரப்­பட்­டுள்­ள­தா­கவும், எனவே அதனை வெற்­றி­ய­டையச் செய்ய முடி­யாது என்றும் ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பி­னர்கள் சிலர் தெரி­வித்­துள்­ளமை  குறித்து தெளி­வு­ப­டுத்­து­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெளி­வு­ப­டுத்­து­கையில்,

அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனை அர­சியல் ரீதி­யான பழி­வாங்­கு­வ­தற்­கான எந்த தேவையும் எமக்கு கிடை­யாது. ஆனால் நூற்­றுக்­க­ணக்­காக அப்­பாவி பொது மக்­களின் உயிர்­களை பழி­யெ­டுத்த இஸ்லாம் அடிப்­ப­டை­வா­தி­களின் தற்­கொலை குண்டு தாக்­கு­தல்­க­ளுக்கும் இவ­ருக்கும் தொடர்பு இருப்­ப­தாக பர­வ­லாகக் கூறப்­ப­டு­கின்­றது. எனினும் கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் இடைக்­கால அர­சாங்கம் அமைத்த போது இவர்கள் இணைந்து ஐ.தே.க. வை பாது­காத்­த­தனால் இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை அர­சியல் பழி­வாங்கல் எனக் கூறி திசை திருப்ப முயற்­சிக்­கின்­றனர்.

ஆனால் மனச்­சாட்­சி­யு­டைய ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னதும், தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னதும் கத்­தோ­லிக்க உறுப்­பி­னர்கள் இதற்­கான பூரண ஆத­ரவை வழங்­கு­வ­தாகத் உறு­தி­ய­ளித்­துள்­ளனர். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியும் இந்த விட­யத்தில் ஆழ­மாக சிந்­தித்து சாத­க­மான தீர்­மா­னத்தை எடுக்கும் என்று எதிர்­பார்க்­கின்றோம்.

இந்த நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னத்தில் சுதந்­திர கட்சி மற்றும் ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பி­னர்கள் உள்­ளிட்ட 64 உறுப்­பி­னர்கள் கையெ­ழுத்­திட்­டுள்­ளனர். அத்­தோடு வெளி­நாடு சென்­றுள்ள சனத் நிஷாந்த, பிர­ஷன்ன ரண­துங்க மற்றும் பவித்ரா வன்­னி­யா­ராச்சி ஆகியோர் தாமும் இதற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக உத்­தி­யோக பூர்வ கடி­தத்­தினை சபா­நா­ய­க­ருக்கு அனுப்­பி­வைத்­துள்­ளனர். எதிர்­வரும் தினங்­களில் இதற்­கான ஆத­ரவு அதி­க­ரிக்கும் அதே­வேளை மிக இல­கு­வாக இந்த பிரே­ர­ணையை வெற்­றி­ய­டையச் செய்ய முடியும்.

அர­சியல் பழி­வாங்கல் தான் எமது நோக்கம் என்று கூறு­கின்­ற­வர்கள் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் எம்மால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பத்து குற்­றச்­சாட்­டுக்­களை நன்­றாக அவ­தா­னித்தால் அது தவ­றான கருத்து என்­பது புரியும். உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மேற்­கொள்­ளப்­பட்ட குண்டு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பரை விடு­விக்­கு­மாறு இரா­ணுவ தள­ப­திக்கு ரிஷாத் பதி­யுதீன் அழுத்தம் பிர­யோ­கித்­த­தாக அவர் தெரி­வித்­தி­ருந்தார். அண்­மையில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது கூட இரா­ணுவத் தள­பதி அதனை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்தார். இத­னையே பிரே­ர­ணையின் முத­லா­வது குற்­றச்­சாட்­டாக குறிப்பிட்டிருக்கின்றோம்.

இது போன்று எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய சகல குற்றச்சாட்டுகளும் ஆதரங்களுடனேயே முன்வைக்கப்பட்டுள்ளன. சபாநாயகர் கருஜயசூரிய ஜனநாயகத்திற்கு மதிப்பளிப்பவர் என்ற ரீதியிலும், குற்றங்களுக்கு துணை போகாதவர் என்ற ரீதியிலும் இந்த விடயத்தில் பக்கசார்பின்றி நடுநிலையாக செயற்பட வேண்டும் என்பதும் எமது கோரிக்கையாகும் என்றார்.