வெசக் தின சுற்றிவளைப்புக்களில் 500 பேர் கைது!

312 0

வெசாக்  தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்  500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று மாலை வரை முன்னெடுக்கப்பட்ட 48 மணி நேர சுற்றிவளைப்புக்களின்போதே  இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, அத் திணைக்களம் தெரிவித்தது.

இந்த சுற்றிவளைப்புக்களில் 10 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய மதுபானம் மற்றும் மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக, திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 011 2045077 அல்லது 011 2192192 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கும் 011 2877882 எனும் பெக்ஸ் இலக்கத்திற்கும் தொடர்புகொண்டு பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் கலால்வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.