சிறைக் கைதிகளை உறவினர்கள், நண்பர்கள் நாளை சந்திக்க முடியாது

246 0

இம்முறை வெசாக் தினமான 18 ஆம் திகதி சிறைக் கைதிகளுக்கு உறவினர்களையும், நண்பர்களையும் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது.

அதற்கு பதிலாக 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளிலேயே இதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெசாக் தினத்தன்று இடம்பெறவுள்ள விசேட நிகழ்வுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அறிவிப்பை சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.