மேல் மாகாணத்தில் ஒரே இரவில் 1262பேர் கைது!

471 0

201606210605209339_sit-arrests-bihar-topper-scam-mastermind-from-up_secvpfமேல் மாகாணத்தில் காவல்துறையினர் நடாத்திய அதிரடி சோதனையின் போது ஒரே இரவில் 1262பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இந்த நடவடிக்கை நேற்று முன்தினம் இரவு நடைபெற்றதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தெரிவு செய்யப்பட்ட குற்றப் பிரதேசங்களாக 110 பகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்ததோடு இந்தப் பகுதிகளில் வைத்தே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் பதிவுசெய்யப்பட்ட குற்றவாளிகள் 46பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் 177பேரும் கைதுசெய்யப்பட்டனர்.அத்துடன் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த 17 குற்றவாளிகளும் அடங்குகின்றனர்.

அத்துடன் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற இருவரும், முப்படையிலிருந்து தப்பிச்சென்ற நால்வரும் அடங்குகின்றனர்.குறித்த இந்த நடவடிக்கைக்காக 3702 காவல்துறையினர் ஈடுபட்டுத்தப்பட்டனர் என காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.