ஜனாதிபதிக்கு உண்மை விளங்கியமை மகிழ்ச்சி – கோத்தபாய

303 0

12-gotabaya-rajapaksa300காலம் தாழ்த்தியேனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உண்மை விளங்கியமை மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் சிலர் வெளியிட்டு வரும் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

மஹிந்த ராஜபக்சவுடன் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எவ்வித ரகசிய உடன்படிக்கையும் கிடையாது.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிலைமைகளை புரிந்து கொண்டமையையிட்டு சந்தோசம் அடைகின்றேன்.

இதேவிதமாக ஜனாதிபதி செயற்படுவார் என எதிர்பார்க்கின்றேன் எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.