மஹிந்தவை கைது செய்ய – புரவெசிபலய அமைப்பு

310 0

news-3படுகொலை மற்றும் மோசடிகளுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட வேண்டும் என்று புரவெசிபலய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரது சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

புரவெசி பலய அமைப்பின் செயற்பாட்டாளரான பேராசிரியர் சரத் விஜேசூரிய இதனை குறிப்பிட்டார்.

இதனிடையே, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்தபோது நிறைவேற்று அதிகாரம் கொண்டவராகவே செயற்பட்டிருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.