வௌ்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்களில் நடைபெறும் மத போதனைகளை அரபி மொழியிலல்லாமல், சிங்கள மொழியில் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு, முஸ்லிம் விவகார அமைச்சர் எம். எச். ஏ. எம். ஹலீம் தெரிவித்துள்ளார்.
குறித்த மத போதனைகளில் ஏனைய மதத் தலைவர்களையும் கலந்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அமைச்சர் ஹலீம், அங்கு நடைபெறும் போதனைகள் தொடர்பான அறிக்கையை முஸ்லிம் விவகார அமைச்சர் என்ற ரீதியில் தன்னிடம் சமர்ப்பிக்குமாறும் முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

