அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம்-மகாகந்தே சுதத்த தேரர்

205 0

அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம் என தெரிவித்த  மகால்கந்தே சுதத்த தேரர் , இந்து மற்றும் பௌத்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கூட்டமைப்புடன் இணைந்து குழுவொன்றினை நியமித்து அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கபட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் மகாகந்தே சுதத்த தேரர் ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பு இன்று சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.