பெலவத்தை சீனிதொழிற்சாலையின் மேற்பார்வையாளர் கைது

408 0

பெலவத்தை சீனிதொழிற்சாலையின் மேற்பார்வையாளர் உள்ளிட்ட மேலும் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

குறித்த தொழிற்சாலையின் மேற்பார்வையாளர், அந்த  தொழிற்சாலையின் 13 ஊழியர்களுடன் சந்தேகத்திற்கிடான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது ஏனைய ஏனைய ஊழியர்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

இது தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசாரணைக்கமைவாக மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டதுடன், கரும்பு  தோட்டமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வோக்கிடோக்கி 05, கடவுச்சீட்டு உள்ளிட்ட பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

இவை  பொலிஸ்  விசேட  அதிரடிப்படையினரால் புத்தல பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் மேற்பார்வையாளருடன் அவரது வாகன சாரதி மற்றும் பணியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.