குண்டுதாரிகளை விடவும் வேகமாக செயற்படும் பிரதமர் – ஜே.வி.பி

370 0

குண்டுதாரிகள் தேவாலயங்கள், ஹோட்டல்களுக்குள் குண்டு வைக்க சென்ற வேகத்தை விடவும் அதிக வேகத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிறைவேற்ற முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இஸ்லாம் அடிப்படைவாத அமைப்பின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகையில், அது தொடர்பாக பிரதமர் கருத்துக்களை தெரிவிக்கும் போது பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாகவே கூறுகின்றார். குண்டுதாரிகள் தேவாலயங்கள், ஹோட்டல்களுக்குள் குண்டு வைக்க சென்ற வேகத்தை விடவும் அதிக வேகத்தில் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற பிரதமர் முயற்சிக்கின்றார்.

இதனால் சர்வதேச பயங்கரவாதத்தை காட்டி இந்த நாட்டின் மக்களையும் தொழிற் சங்கங்களையும் ஒடுக்கும் திட்டங்களையே பிரதமர் மேற்கொள்வதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.