ஒருவர் பட்டதாரியாகி 6 மாதத்துக்குள் அரசாங்கத்தில் வேலை – ரணில்!

284 0

601957111ranil-1பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று வெளியேறும் ஒரு பட்டதாரி, வெளியில் வந்து ஆறு மாதத்துக்குள் அரசாங்கத்தின் ஏதாவது ஒரு துறையில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள வழிசெய்யவேண்டுமென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (வியாழக்கிழமை) அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அரசாங்கத் துறையில் பற்றாக்குறையாக இருக்கும் அனைத்துத் தொழிலுக்கும், உடனே அமுலுக்கு வரும் வகையில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளவேண்டுமெனவும் பணிப்புரிரை விடுத்துள்ளார்.