3 தொகுதிகளுக்கான தேர்தல் திகதி அடுத்த வாரம் அறிவிப்பு

278 0

91373773_votingதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சையில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு அதிகளவில் பணக் கொடுக்கல் வாங்கல் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதோடு திருப்பரங்குன்றம் சட்டப் பேரவை உறுப்பினர் இறந்ததால் அந்த தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடக்க உள்ளது.

இந்த நிலையில், இந்த மூன்று தொகுதிகளுக்குமான தேர்தல் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.