திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு

310 0

gunதனது கடமைக்கு இடையூறு விளைவித்து, தப்பிச் செல்ல முயற்சித்தவர்கள் மீது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக இன்று அதிகாலை இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த திலிப் குமார் என்ற நபர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவத்தில் மற்றுமொரு நபரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக சிலர் அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளதுடன், அவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அமைதியின்மையை தோற்றுவிக்கும் வண்ணம் செயற்பட்ட குழுவினர் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து வேனொன்றில் தப்பி செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், குறித்த வேனையும் பொலிஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.