குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்-சரத்பொன்சேகா

257 0

உளவுத்துறை அதிகாரிகள் சிலரை சிறையில் அடைத்து வைத்துள்ளதால் அப்பிரிவு முற்றாக செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் வாதத்தில் எந்த உண்மையும் இல்லை. குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டி ஏற்பட்டால் அதனை அனுபவித்தே ஆக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.உளவுத்துறை அதிகாரிகள் சிலரை சிறையிலடைத்துள்ளதாலே அத்துறை செயலிழந்திருப்பது தொடர்பாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.