யாழில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு

451 0

bodyயாழ்ப்பாணம் – சங்கானை பிரதேசத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை கடற்தொழிலுக்காக சென்ற 55 வயதான சிவநாதன் செல்வரத்தினம் என்பவர் காணாமல் போயிருந்த நிலையில், நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த திங்கட்கிழமை கடற்தொழிலுக்காக வீட்டில் சென்ற நிலையில், மாலையாகியும் வீடு திரும்பாததால் சிவநாதன் செல்வரத்தினம் என்ற மீனவரின் குடும்பத்தினர் ஊர்காவல்துறை பொலிஸ் நிலயத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் இவரது துவிச்சக்கரவண்டி மண்டைதீவு கடற்கரைக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், குறித்த நபரைத் தேடும் பணிகள் நேற்றைய தினம் இடம்பெற்றபோது சிவநாதன் செல்வரத்தினம் என்ற மீனவர் கடலின் தாவரங்கள் சூழ்ந்த சதுப்பு நிலப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

நோய்வாய்ப்பட்டிருந்த இவர் சதுப்பு நிலத்துக்குள் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.