வடக்கில் மீண்டும் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுகின்றதா? -சுரேஸ் (காணொளி)

291 0

வடக்கில் மீண்டும் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுகின்றதா? என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணயின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்லைக்கழக மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இக்கருத்தை வெளியிட்டார்.