நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் விடுதலை!

305 0

prisonசட்டமா அதிபர் திணைக்களத்திற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜா விடுத்த எழுத்து மூலமான நடவடிக்கைக்கு அமைவாக நீண்ட காலமாக சிறையிருந்த இரு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்படும் வழக்குகள் மட்டக்களப்பு நீதவானினால் விரைவுபடுத்தப்பட்டு முடிவுறுத்தப்படுகின்றன.

2014ம் ஆண்டிலிருந்து சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து அறிவுறுத்தல் பெறப்படாது இருந்த இரண்டு வழக்குகள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் அறிக்கையை விரைவில் சமர்ப்பிப்பதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா விடுத்த எழுத்து மூலமான நடவடிக்கைக்கு அமைவாக நீண்ட காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆறுமுகம் பிரகாஸ் மற்றும் பகீர் முகைதீன் ஆகியோரின் வழக்குகள் தகுந்த சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று (13) விடுதலை செய்யப்பட்டனர்.

இவ்வாறான பல வழக்குகள் நீதவான் கணேசராஜாவின் நடவடிக்கையினால் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.