மஹிந்த தரப்பு இனவாதம் பேசுகிறது – துமிந்த குற்றச்சாட்டு

283 0

mahinda-celibrating-posan-in-japen-005-541x406மஹிந்த ஆதரவு அணிஇனவாதம் மற்றும் வைராக்கியத்தை தூண்டும் வகையிலேயே ரத்தினபுரியில் கூட்டத்தை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நாட்டை சிறந்த வகையில் முன்னெடுத்து செல்லும் அரசாங்கத்தை சீர்குலைக்கும் வகையில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றையதினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்கள் நன்மைப்பெறும் வகையிலான பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன.

இது தொடர்பில் சிலர் தவறான கருத்துக்களை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.