கிளிநொச்சியில் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாதோரால் கடத்தல்!

488 0

kadaththalயாழ்ப்பாண மாவட்டம் வரணியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கிளிநொச்சியில் நேற்று மதியம்(புதன்கிழமை) கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் தனது வீட்டில் இருந்து கிளிநொச்சியில் உள்ள தனது பதிப்பகத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடத்தல் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிக் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதற்கிணங்க காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் கடத்தப்பட்ட வர்த்தகர் தொடர்பாக எந்தவொரு தகவலும் தெரியவரவில்லையென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.