நான்கு வழிச்சாலை பணிக்காக 120 வயது மரம் வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நடப்பட்டது

423 0

201610121140280621_120-aged-tree-removed-with-its-roots-and-replaced-in-another_secvpfமானாமதுரை அருகே 120 ஆண்டு கால பழமையான மரம் 4 வழிச்சாலை பணிக்காக மாற்று இடத்தில் நடப்பட்டது.மதுரையில் இருந்து பரமக்குடி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே முத்தனேந்தலில் 4 வழிச் சாலை அமையும் இடத்தில் ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இங்கு 120 வயதான இலந்தை மரம் உள்ளது.

இந்த மரத்தை வெட்டாமல் வேருடன் மாற்று இடத்தில் வைக்க முடிவு செய்தனர். அதை தொடர்ந்து ராட்சத மண் அள்ளும் எந்திரம் மூலம் வேருடன் மரம் பெயர்த்து எடுக்கப்பட்டு மாற்று இடத்தில் நடப்பட்டது.1969-ல் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்க எங்களது இடத்தை வழங்கினோம். தற்போது 4 வழிச்சாலை பணிக்காக எங்கள் நிலத்தில் 2 ஆயிரம் மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

இதில் மூதாதையர் காலத்தில் நடவு செய்யப்பட்ட 120 ஆண்டுகள் பழமையான சீமை இலந்தை மரமும் பாதிக்கப்படுவதால், தாவரவியல் நிபுணர்களின் ஆலோசனைப்படி அந்த மரத்தை அப்படியே பெயர்த்து எடுத்து மாற்று இடத்தில் நடவு செய்துள்ளோம். இம்மரம் கான்பூர், நாக்பூர் ஆகிய இடங்களில் அதிகளவு காணப்படுகிறது. செப்டம்பரில் இதில் பழங்கள் பழுக்க தொடங்கும். ஒவ்வொரு பழமும் எலுமிச்சை அளவில் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.