கட்டுநாயக்க விமான நிலைய வீதிக்கு பூட்டு

257 0

கட்டுநாயக்க, பண்டாரநயாக்க சர்வதேச விமான நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய வெளிப்புர வாகன தரப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார் ஒன்றினை சோதனை முன்னெடுக்கப்படுவதன் காரணமாகவே இந்த வீதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.

இதனால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகளும் இதனால் ஸ்தம்பித்தமடைந்துள்ளதுடன், குறித்த வீதியை பயன்படுத்தும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை பதுளை வைத்தியசாலை மற்றும் பதுளை நீதிமன்றக் கட்டடத் தொகுதியிலும் சோதனை நடவடிக்கைகள் படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.