இலங்கை தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா எப்.பி.ஐ (F.B.I) ஒத்துழைப்பு

333 0

கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்காவின் எப்.பி.ஐ (F.B.I) ஒத்துழைப்புவழங்குவதாக அமெரிக்க தூதரம் அறிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஊடகப் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார். 

கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

காயமடைந்த மேலும் பலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.