உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் கைது!

289 0

கம்பளைப் பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டள்ளார்.

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோராவத்தை, பன்விலதென்ன பகுதியில் நேற்று  செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் , பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளின் போது சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மணிக்கம்பிட்டி – கந்துருவெல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆதம்பாவா மொஹமது ரிஷ்மி எனப்படுபவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது இவரிடமிருந்து அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த உள்நாட்டு துப்பாக்கிகள் இரண்டும், 78 ஈயம் உருண்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸார் சந்தேக நபரை கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.