தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம்(படங்கள்)

322 0

vavuniya-protestedமலையக தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபா சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாக இன்று வவுனியாவில் ஆதரவு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

கடந்த சில வாரங்களாக தோட்டத்தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு ஆயிரம் ரூபாய் சம்பளக்கோரிக்கைக்கு ஆதரவு வழங்கும் வகையிலும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோகராதலிங்கம் உட்பட மாகாணசபை உறுப்பினர்கள் உயர் அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

vavuniya-protested-2 vavuniya-protested-1