நாடு கடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட மூவர் விடுதலை

313 0

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட மூவர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர்கள் UL 226 என்ற விமானம் மூலம் நேற்று அதிகாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். 

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து குறித்த நபர்களிடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 24 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.