அன்னை பூபதி அவர்களின் 31ம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வு-பிராங்பேர்ட்

720 0

அன்னை பூபதி அவர்களின் 31ம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வுடன் நாட்டுப்பற்றாளர் நாளும் மிகவும் உணர்வுபூர்வமாக யேர்மனியின் பிராங்பேர்ட் மற்றும் வூப்பெற்றால் ஆகிய இரு நகரங்களிலும் நடைபெற்றது. பொதுச்சுடரேற்றல், தேசியக் கொடியேற்றல், ஈகைச்சுடரேற்றல், மலர் வணக்கம், அகவணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து, வணக்க நடனங்கள், கவிதைகள், நினைவுரை, சிறப்புரை என்பனவும் இடம்பெற்றது.

நாட்டுப்பற்றாளரும், ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, அவரது நினைவு தாங்கிய ‘ நினைவுகளுடன் பேசுதல்’ எனும் நூல் வெளியீடும் இடம்பெற்றது. சத்தியமூர்த்தியின் துணைவியார் திருமதி. நந்தினி சத்தியமூர்த்தி அவர்களும், அவரது மகள் செல்வி. சிந்து சத்தியமூர்த்தி அவர்களும் இணைந்து நூலினை வெளியிட பிரதிகளை மக்கள் பெற்றுக்கொண்டனர்.
இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு கோசப்பாடலுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றது.